Friday, 12 July 2013

கால் மாற்றும் கலை

கால் மாற்றும் கலையினைப் பற்றி நாம் இப்பதிப்பின் மூலம் தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது அந்தக் காலும் கலையும் அல்ல. இங்கே கால் என்பது காற்றை குறிக்கும். அதாவது மூச்சுக்காற்று. கலை என்பது அதனை தமது விருப்பத்திற்கு பழக்கும் வித்தையை குறிக்கும். இவ்வுலகில் நமது தமிழ் சித்தர்கள் தவிர வேறு எவரும் மூச்சுக்கலையைப் பற்றி விரிவாக கூறவில்லை எனலாம். அதிலும் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் என மொத்தம் எண்ணாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். (திருமூலர் மொத்தம் 8000 பாடல்கள் பாடியுள்ளதாக வள்ளலார் கூறுகிறார், அவற்றில் 3000 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன, மேலும் திருமூலர் 3000 ஆண்டுகள் அல்ல, 8000 ஆண்டுகள் பரு உடலுடன் வாழ்ந்துள்ளார்) இதிலிருந்து எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்கள் இந்த மூச்சுக்கலையை பற்றி அறிந்திருந்தனர் என்று ஒருவாறு சொல்லலாம். இவர் பாடிய திருமந்திரத்தில் இந்த மூச்சுக்கலையை பற்றி பல விஷயங்களை நாம் அறிய முடிகிறது. இவருடைய சமாதிஇடம்தான், சிதம்பரம் கோயில் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. திருமந்திரத்தை வள்ளலார் கூறும்போது, 'இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமெனில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' என்கிறார். இந்து மதங்களில், எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள் இந்துக்கள். அரசமரத்தடியில் இருக்கும் இருபாம்புகள் பின்னி நிற்குமாறு கல்லில் செதுக்கியிருப்பார்கள். அவை நமது இடங்கலைமூச்சும், பிங்கலை மூச்சும் இணைந்த சுழுமுனை மூச்சை குறிக்கும் அடையாளம். அதாவது அரசமரத்தடியில் அமர்ந்து சுழுமுனை இயக்கத்தில் தியானம் செய்ய இறையருள் கிடைக்கும் என்பதனை புறத்திலே இவ்வாறு செய்திருக்கிறார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, முருகனின் காலடியில் இருக்கும் பாம்பு, விநாயகரின் வயிற்றில் சுற்றியுள்ள பாம்பு, விஷ்ணு பாம்பின்மேல் படுத்திருப்பது, கண்ணன் பாம்பின்மீது நடனம் ஆடுவது போன்ற அனைத்தும் ஒவ்வொரு தத்துவத்திலுள்ள மூச்சுக்காற்றை குறிக்கிறது என்பதை அறியவேண்டும். ஆனால் இந்துக்கள் அதன் உண்மைதெரியாமல் பால், பழம், முட்டை வைத்து குருட்டு பூஜை செய்து செய்துவருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும் இந்த நமது மூச்சின் நடனத்தையே குறிக்கும். நமது வள்ளலாரும் இந்த மூச்சுப்பயிற்சி பற்றி சில இடங்களில் தமது திருவருட்பாவில் கூறியுள்ளார். எனவே திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் சித்தர் கருத்துகள் போன்றவை கூறும் சர பயிற்சியினை பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் பொதுவாக மூச்சுக்காறு பற்றின உண்மையினை காணலாம். நமது நாசியின் வழியே உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும் காற்றுதான் மூச்சுக்காற்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறோம்? ஏன் நமக்கு ஒரு நாசித்துளைக்கு பதிலாக இரு நாசித்துளைகள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு கண்ணுக்கு பதிலாக இரு கண்கள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு காதுக்கு பதிலாக இரண்டுக் காதுகள் உள்ளன? என்று சிந்தித்தோமா? இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன! பிறகு ஏன் இரண்டு? ஒன்று பழுதானால் இன்னொன்றை பயன்படுத்திக்கொள்ள இறைவன் நமது உடலில் அமைத்த கூடுதல் பாதுகாப்பு (Step-in) அவையங்கள் என்று கூறலாம். ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்! எப்படி? நமது முன்னோர்கள், நமது இடதுபுறம் உள்ள நாசித்துவாரத்தை 'இடகலை' / 'சந்திரகலை' என்றும் வலது புறம் உள்ள நாசித்துவாரத்தை 'பிங்கலை' / சூரியக் கலை என்றும் கூறுவர். 1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு. 2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு. 3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர். ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை 'சரவோட்டம்' என்பார்கள். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம். இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் 'கலை' என்கிறோம். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் இவை முன்னோர் வாக்கு. சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சர கலையை இயக்கத்தெரிந்தவனிடம் சரசம் என்று விளையாட்டுத் தனமாக நடந்துக்கொண்டால் சரம் கற்றவன் சீறி சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்துவிடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம், வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும். நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். எனவேதான் வடலூர் ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் நம்பெருமான், ஞானசபையினை சுற்றி 21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப் பொருத்தியுள்ளார்கள். 1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான் தனங்கொளிரட்டிய தாறு நடந்தால் வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே. (திருமந்திரம்) விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள் என்று திருமந்திரம் கூறுகிறது. ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் 'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'! அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும். கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல் உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது. எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே அது இதற்காகத் தான். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)} மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன், 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான், 93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான், 87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான், 80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான், 73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான், 66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்... இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்) ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'! (அ+உ+ம=ஓம்). ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்) இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார் திருமூலர். ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல் ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (திருமந்திரம்) இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேல். 1000 வருடங்கள் வயதுள்ள ஓர் கடலாமை சமீபத்தில் இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வருதே! ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம். இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் 8000 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தனர். இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். ஆமைதான் உலகில் நீண்ட நாள் உயிர்வாழும் பிராணி என்று அறிவியலார்கள் தற்காலங்களில்தான் கண்டுபிடித்தார்கள். "எப்போதும் பயத்தோடு இருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கக்கூடாது. எப்போதும் மன உற்சாகத்தோடு இருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல் (ஓடுதல்), வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு (மூச்சுக்காற்று) அதிகமாகச் செலவாகாமல் ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்" (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம்339) 'அருகுநுனி பனியனைய சிறிய துளி பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்' (திருப்புகழ்) ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழவைக்கக்கூடிய உயிர்ச்சக்தியினை பெற்றிருக்கின்றன. இயற்கையாக நாம் 120 வருடங்கள் வாழ்வதற்கும், குறை ஆயுள் அடையவும் நம் தந்தைதான் காரணம். எப்படி? பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம் பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே. (திருமந்திரம்) விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிரைகள் காணமுடியும். ஆனால் மாத்திரை குறைய குறைய அதற்கேற்றாற்போல குழந்தையின் ஆயுளும் குறையும் என்கிறார் திருமூலர். மலம், ஜலம் தடைபடுமானால் என்ன செய்ய வேண்டும்? மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல் வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333) அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும். நமது விருப்பம்போல் சூரியக்கலையினையும், சந்திரக்கலையினையும் மாற்றுவது எப்படி? நாம் இடதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் வலதுபக்கம் (சூரியக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். நாம் வலதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் இடதுபக்கம் (சந்திரக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். இது மிக மிக எளிமையான வழி. முயன்று பாருங்கள். தேகசம்பந்தம் பற்றி வள்ளலார் கூறுவது யாது? 1. பகலில் தேகசம்பந்தங்கூடாது. 2. முதலில் மனதைத் தேக சம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். மூச்சு அதிர்ந்து மேலிடாது மெல்லென பெண்போகம் செய்தல் வேண்டும். 3. தொடங்கிய போது அறிவு வேறுபடாமல், மன முதலிய கரண சுதந்திரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். 4. புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். 5. அவ்வுபாயமானது பிராணவாயுவை (மூச்சுக்காற்றை) உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளுதலாம். 6. தேகசம்பந்தம் ஒரு முறையன்றி அதன் மேலுஞ் செய்யப்படாது. 7. தேகசம்பந்தம் செய்தப்பின், குளித்துவிட்டு இறைவனை நினைந்து தியானம் செய்துவிட்டு பிறகு படுக்க வேண்டும். 8. எந்தக்காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடது கை பக்கமாகவே படுக்கவேண்டும். (அப்போதுதான் மூச்சுக்காற்று எப்போது சூரியக்கலையில் இருக்கும்) 9. இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற்கு ஒருமுறை செய்வது அதம பசஷம் (அதர்மம்). சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும். 10. 8 தினத்திற்கு ஒரு முறை செய்வது மத்திம பசஷம் (நடுவுநிலை). 11. 15 தினத்திற்கு ஒரு முறை செய்வது உத்தம பசஷம் (உத்தமம்) 12. அதன் மேற்படில் (15 தினத்திற்கும் மேல் செய்யவில்லை எனில்) சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 13. இரவில் சொப்பனம் வராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும். 14. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி கூடாது. 15. ஜீவன் என்கின்ற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மட்டும் எடுத்துவிடவேண்டியது. அதாவது 15 தினத்திற்கு ஒருமுறை தேக சம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். 16. ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்தில் செய்யலாம் என்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 339,340,341,344,423) கரு உற்பத்தி பற்றி வள்ளலார் கூறுவது என்ன? ஆணிடத்திலிலுள்ள சுக்கிலத்திலும், பெண்ணிடத்திலிலுள்ள சுரோணிதத்திலும் கடவுள் ஆவி உள்ளது. கோசத்தின் முன் விஷம் (சத்தி) ஒரு பாகம், அதை அடுத்து பூதம் (அறிவு) ஒரு பாகம், அதற்கு மேல் அமுதம் (விந்து) அரை பாகம், என சுக்கிலம் இரண்டரை வவராகன் எடை அளவுக்கொண்டது. இவ்வாறு பெண்பாலிடத்தும் உண்டு. முன்னுள்ள விஷ பாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம். பூதம் வெளிப்பட்டால் வியாதி. அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி. கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார். இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும் விந்துவளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் இவற்றாலும் கர்ப்பம் இல்லை. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360) குழந்தைகளின் பாலின உருவாக்கம் பற்றி வள்ளலார் கூறுவது என்ன? சுரோணிதப் பையிடத்தில் (கர்ப்ப பை) மூன்றுமணி சேர்ந்த கொத்து ஒன்று வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து ஒன்று இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கின்ற காலத்தில், மூன்று சேர்ந்த கொத்தில் (வலது புறத்தில் உள்ளது) சம்பந்தப் பட்டால் ஆண் குழந்தையும், நான்கு சேர்ந்த கொத்தில் (இடது புறத்தில் உள்ளது) சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும். புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாக புணர்ந்தால் ஆணும், இடது புறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360) சூரியக்கலை (பிங்கலை), சந்திரக்கலை (இடகலை) பற்றி வள்ளலார் கூறுவது என்ன? 1. சாதாரண ஜீவர்கள் சந்திரக்கலையில் இறப்பதும் பிறப்பதும் இயற்கை. 2. பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை. 3. சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம். 4. தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்தக் கண்களில் செலுத்தல் வேண்டும். 5. சூரியக்கலையில்தான் தியானம் செய்யவேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 398) "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றின் தோன்றாமை நன்று." என்பார் திருவள்ளுவர். ஒருவன் புகழோடு தோன்றுவது அவன் கையிலா இருக்கிறது. பிறக்கும்போது ஒன்றும் தெரியா குழந்தையாக பிறந்து அழுகிறோம். அக்குழந்தைக்கு, நாம் புகழோடு தோன்றினோமா, என்று எவ்வாறு தெரியும்? இங்கு வள்ளலார் கூறியுள்ளதை சற்று பார்ப்போம். பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பார்கள் என்று கூறியுள்ளார். இது எவ்வாறு முடிகிறது? பக்குவர்கள் சூரியகலையில் இறப்பார்கள் என்கிறார் வள்ளலார். எனவே சூரிய கலையில் மூச்சு சரம் ஓடுகையில் ஒருவன் இறந்தால், அவனது மறுபிறவி கட்டாயம் சூரியகலை மூச்சு ஓட்டத்தில் ஆரம்பமாகும். இவ்வாறு சூரிய கலையில் பிறப்பவர்களே ஞானிகளாக ஆகமுடியும். எனவே நாம் நமது இந்த வாழ்நாளில் எப்போதும் சூரியக்கலையில் இருக்க பழகிக்கொள்வோம். முக்கியமாக இறக்கும் தருவாயை, நாம் உணர்ந்தால் சூரியகலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படியில்லையேல் சுத்த சன்மார்க்க நெறியில் சாகா வரம் பெற்று அடுத்துத் தோன்றாமை / பிறவாமை நன்று. என்பதே இக்குறளின் உண்மை பொருளாக உள்ளது. சூரிய சந்திரக் கலைகள் இயற்கையாக நிகழும் நாட்கள் எவை எவை? சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும். 1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும். திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும். புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும். வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும். 2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும். சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும். ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும். செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும். 3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும். வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும். மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். காரிய சித்திபெற சர ஓட்டம் பார்ப்பது எப்படி? நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை கொடுக்கும். நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:- 1. உணவு உட்கொள்வதற்கு. 2. குளிப்பதற்கு. 3. மலம் கழிப்பதற்கு. 4. முக்கியமானவரைக் காணுவதற்கு. 5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு. 6. கடினமான தொழில் செய்வதற்கு. 7. பணம் கோரி பெறுவதற்கு. 8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு. 9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு. 10. போதனை செய்வதற்கு. 11. தீராத வழக்கு தீருவதற்கு. 12. உறங்குவதற்கு. மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது. நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:- 1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல். 2. பொருள் வாங்குதல். 3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு. 4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும். 5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு. 6. புதுமனை புகுதல். 7. சிகை அலங்கரிக்க. 8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு. 9. விவசாய நாற்று நடுவதற்கு. 10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு. 11. தாலி கட்டுவதற்கு. 12. கிணறு வெட்டுவதற்கு. 13. புதிய படிப்பு படிக்க. 14. அரசியல் அமைச்சர்களை பார்க்க. மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது. சந்திர கலை பெண் தன்மையுடையது. நமக்கு இருபுற நாசியிலும் (சுழுமுனை) மூச்சோட்டம் சில நேரங்களில் மட்டுமே செல்லும். அந்நேரத்தில் நாம் இறைநினைப்புடன் தியானம் செய்ய சமாதி நிலை கிட்டும். முனிவர்கள், சித்தர்கள், இறையாளர்கள், அருளாளர்கள் எப்பொழுதும் தமது கலை திறனால் தமது மூச்சினை சுழுமுனையில் நிறுத்தி யிருப்பார்கள். அப்போதுதான் இறைநிலை விரைவில் கிடைக்கும். யாருக்கேனும் சுழுமுனை ஓட்டம் இருப்பின் அவர்கள் மெளனமாக அமைதியாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்நேரத்தில் நாம் என்ன சொன்னாலும் அது பலிக்கும். நல்லது மற்றும் கெட்டது என்ற விக்தியாசம் இல்லாமல் எது சொன்னாலும் பலித்துவிடும். எனவேதான் மேற்கண்ட இறையாளர்கள் கடிந்து ஒரு சாபமிட்டால் அது பலித்துவிடும். சுழுமுனை அழிவின் சக்தியாக உள்ளது. அதீத சக்தியுடையது. ஆண், பெண் தன்மையற்ற அலி தன்மையுடையது. எனவே சரம் தெரிந்தவர்களிடம் நாம் விளையாட்டாக நடந்துக்கொள்ளக்கூடாது. பெரும்பாலும் சுழுமுனை இயக்கம் பகல் 12 மணி அல்லது இரவு 12 மணிக்கு நடைபெறும். பாதி இரவில் பாவியேனை எழுப்பி தன்னுடன் இறைவன் கலந்ததாக வள்ளலார் கூறுவார். இறைவன் பாதி இரவில் வரக்காரணம், அந்நேரத்தில்தான் நமக்கு சுழுமுனை இயக்கம் நடைபெறும். இன்னும் சில உபாயங்களைக் காண்போம். 1. எந்த ஒரு பயணத்தையும் சந்திரக்கலையில் துவங்கி சூரியக்கலை நடக்கும்போது செல்லவேண்டிய இடம் சென்றால் சென்ற காரியம் நிச்சம் வெற்றி. 2. சரம் ஓடும் பக்கம் "பூரணம்" என்று பெயர். சரம் ஓடாத பக்கம் "சூன்யம்" என்று பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில் ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம். 3. சந்தரக்கலை நடக்கும்போது மேற்கும், தெற்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி. 4. சூரியக்கலை நடக்கும்போது வடக்கும், கிழக்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி. 5. மூச்சு உள்ளே இழுக்கும்போது வேண்டிய விருப்பம் நினைக்க அவை கைகூடும். 6. மூச்சு வெளியே போகும்போது நமக்கு வேண்டாததையும் வெளியே தள்ளலாம். காமமே போ, சினமே போ, வறுமையே போ, சாவே போ என்பது போல சிந்தனை செய்ய அவை நடக்கும். சரஓட்டத்தின்படி தம்பதிகள், விரும்பிய குழந்தைகளை பெறுவது எப்படி? 'நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர சொரூப நமோ நம்' (திருப்புகழ்) நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தை தெரிவித்த பின்புதான் இறைவனுக்கே வணக்கம் செலுத்துகிறார் அருணகிரிநாதர். ஏனெனில் இந்த நாத விந்து இயக்கங்கள்தான் இவ்வுலகத்திற்கு அச்சாரம். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பார் வள்ளலார். அப்படி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ இந்த நாதமும் விந்துவும் தேவைப்படுகிறது. இவைகள் இன்றி இந்த உலகம் இயங்காது. எனவேதான் நாதத்தை சக்தியாகவும், விந்துவை சிவனாகவும் உருவகப்படுத்தி இந்து மதம் பல கதைகளை சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நாதவிந்து சொரூபிகளே! ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகுமாகில் தரணி முழுதாளும் பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்) குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவியும் அலியாம் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம்) கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பக்கம் மூச்சு சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும். மாறாக பெண்ணுக்கு வலப்பக்கம் மூச்சும் ஆணுக்கு இடப்பக்கம் மூச்சும் சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும். இரண்டு பேருக்கும் ஒரே பக்கம் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் அலியாகும். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும். எனவே, நாம் விரும்பும் குழந்தையினை பெற்றெடுக்கும் இரகசியம் நமது மூச்சில்தான் உள்ளது. கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன? கருதரித்துவிட்டது, இனி நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் தம்பதிகளும், சொந்தங்களுக்கும் அதிர்ச்சிதரும் ஒரு விஷயம் இந்த கருச்சிதைவு என்பதாகும். இதி ஏன் ஏற்படுகிறது? கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில் கொண்ட குழவியும் மோமள மாயிடும் கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே (திருமந்திரம்) தேகசம்பந்தத்தின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர். குறையுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் என்ன? 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது' என்பார் ஒளவை ஞானிகள். மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (திருமந்திரம்) மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம். ஊமை குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் ஜலம் (சிறுநீர்) மிகுந்திருத்தலே காரணம். பார்வைதிறன் அற்று குருடனாக குழந்தைகள் பிறக்க காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம், ஜலம் (சிறுநீர்) சேர்ந்து மிகுந்திருத்தலே காரணம். பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும் பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே (திருமந்திரம்) குழந்தைகள் குள்ளமாக இருக்க காரணம் என்ன? தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். குழந்தைகள் முடமாக (நொண்டி) இருக்க காரணம் என்ன? தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை முடமாக இருக்கும். குழந்தைகள் கூனனாக இருக்க காரணம் என்ன? தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் நீளமும் திடமும் ஒருசேர குறைந்து வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை கூனனாக இருக்கும். சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். அன்பர்களே! மேற்கண்டவாறு சரம் பார்த்து காரியம் செய்வது என்பது வள்ளலார் வழிநடக்கும் சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையற்ற ஒன்று. எனினும் இதனை தெரிந்து வைத்திருப்பதால் தவறில்லை. இதற்கு அடிமையாகிவிடாதீர்கள். நமக்குத் தேவை இறைவன் அருள் மட்டுமே. அந்த அருளையடைய முற்படுங்கள். அருளையடைய முற்படும்போது இறைவன் அதற்கேற்ப நமது சரங்களை நமக்குத்தெரியாமலேயே சரிசெய்வான். எனவே நமது முயற்சியால் இதனை செய்வதைவிட, இறைவன் சுதந்திரத்தில் இதனை விட்டுவிடுதல் நலம். இறைவன் அருள் எப்படிப்பட்டது? என்று வள்ளலார் கீழ்கண்டவாறு கூறுகிறார், சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும் நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும், தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளக்குகின்ற பூரண விளக்க வண்ணத்தையுடையது என்று அறிய வேண்டும். இவ்வருள் எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய வேண்டும். அந்த அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் மட்டுமே பெறக்கூடும், வேறு எதனாலும் பெற முடியாததாக உள்ளது. இவ்வருளை பெற்றால் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும் வல்லமை பெறும். வியாதிகள் நீங்க வள்ளலார் கூறும் மருந்து என்ன? சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால் - அந்த ஜீவகருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்திசெய்து, விஷேஷ செளக்கியத்தை உண்டுபண்ணு மென்பது உண்மை. குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு வள்ளலார் கூறும் மருந்து என்ன? பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணுமென்பது உண்மை. நீண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து என்ன? அற்பவயது என்று குறிப்பினால் அறிந்துக்கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது உண்மை. கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி என்ன? கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டுபண்ணுமென்பது உண்மை. ஜீவகாருண்ய விரதத்தால் அடையும் பலனாக வள்ளலார் கூறுவது யாது? பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள சம்சாரிகளுக்கு, 1. கோடையில் வெயில் வருத்தாது. 2. மண்ணும் சூடு செய்யாது. 3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா. (தற்போது உத்ராகண்ட் மாநிலத்தில் பெய்யும் பெருமழையில் இப்படிப்பட்ட சம்சாரிகள் மாட்டிக்கொண்டிருந்தால் இவர்களையெல்லாம் எவ்வித இயற்கை பேரழிவும் எதுவும் செய்யமுடியாது.) 4. விடூசிகை, விஷக்காற்று, விஷசுரம் முதலிய அஜாக்கிரதைப் பிணிகளும் உண்டாகாது. 5. ஆற்று வெள்ளத்தாலும், கள்ளர்களாலும், விரோதிகளாலும் கலக்கப் படார்கள். 6. அரசர்களாலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள். 7. இவர்களது விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும். 8. வியாபாரத்தில் மேன்மேலும் தடையில்லாமல் இலாபங்களும் உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும். 9. சுற்றங்களாலும், அடிமைகளாலும், சூழப்படுபவர்கள் துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜெந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயம் செய்யப்படமாட்டார்கள். 10. எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதியினாலும் ஊழ் வகையாலும் சத்தியமாக வராது. 11. இவர்களே தெய்வமென்று உண்மையாக அறியவேண்டும். மேலும் பல சிறப்புகளை வள்ளலார் தனது திருஅருட்பாவில் இவர்களைப்பற்றி கூறியுள்ளார். எனவே நாம் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நமது வாழ்நாளில் கடைபிடித்து, இறையருள் பெற்று மரணமிலா பெருவாழ்வு அடைவோம். நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Friday, 5 July 2013

சுத்தவெளி

சுத்தவெளி

சுத்த வெளியில் இருந்து திணிவு திணிவு உருண்டு முதலில் அணு என்று பெயரை எடுத்து, பிறகு பேரண்டத்திற்க்குள் வந்து அதை சுழ்ந்து அழுத்தும் காரணத்தினால் அணு வேகமாக சுழன்று அணுக்கள் கூடி? அது மற்ற அணுக்களோடு இணைந்து அதன் சுழல் வேகத்திற்கு தக்கவாறு பௌதிகமாகி, முதல் பூதம் என்ற விண், பின்பு காற்று, பின்பு நெருப்பு, பின்பு நீர், பின்பு கெட்டி பொருளாக அதன் வேகத்திற்கு தக்கபடி பஞ்சபூதமாகி இதன் விகிதாசாரத்திற்க்கும் ஏற்ப உயிர்களாகி, அறிந்து கொள்ளும் சக்தியை பெற்று ஓர் அறிவை பெற்று, அதை அறியும் வகையுள்ள உறுப்பையும் பெற்ற உயிரினமாகி, முறையே ஒன்று முதல் ஐந்து வித அறிவையும், உறுப்பையும் பெற்ற உயிரினணுக்களாகி பின்பு நுட்பமான அறிவையும், உடல் அமைப்பையும், அழகான தோற்றத்தையும் பெற்ற மனிதனாகி, அதன் பிறகு ஐந்தின் அறிவை கொண்டு முதிர்ந்து தெளிந்த பின்பு ஆறாவது பகுத்தறிவை பெற்று வாழ்கின்ற மனிதன் உயிர் இனங்களிலேயே உயர்ந்த நிலையில் வாழும் இனமாகும். மனிதர்க்கு மனிதர் உடல் தோற்றமும், உறுப்புகளின் தோற்றமும் ஒன்று போல் தெரிந்தாலும், கூட மனத்தோற்றத்தில் ஒருவருக்கு ஒருவர் பல்லாயரக்கணக்கில் வேறுபடுகின்றனர்.

ஆகவே முதல் பூதமான விண், கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாமல் சுழன்று கொண்டிருக்கின்றன. இதை ஆன்மீகவாதிகள் ஞானத்தால் உணர்ந்து கூறுகின்றனர். இதை பரமாத்மா என்று கூறுகிறார்கள்.

இரண்டாவது பூதமான காற்றை அளக்க முடியும். வகையை அறியும் தன்மை விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. காரணம் அதற்கு கருவிகள் இல்லை.

முன்றாவது பூதமான நெருப்பை உடலில் உள்ள போது கருவிகளின் துணை கொண்டு அளக்க முடியும். சூடு தோன்றிய காரணம், அதன் தன்மையை விஞ்ஞானிகளோ, மருத்துவர்களோ கூறமுடியாது. காரணம் அதற்கும் கருவிகள் இல்லை.

நான்காவது பூதமான நீர் தத்துவத்தை உடலில் இருக்கும் போது நிறத்தையும், அதன் தரத்தையும் சோதனை கருவிகளின் மூலம் அறிய முடியும். ஆனால் மு்லத்தை அறிய முடியாது. காரணம் கருவிகள் இல்லை.

ஐந்தாவது பூதமான கெட்டி பொருளான மண் தத்துவம் உடல் உறுப்புகளாக, உடற்பகுதிகளாக, தோற்றணுக்களாக, உட்பல பிரிவுகளாக, கோடான கோடி சிற்று உடம்புகளை (திசுக்கள் or அணுக்கள்) கண்ணாலும், பெரிதுபடுத்தும் கருவிகளாலும் காண முடிகிறது. குறிப்பிட்ட தொல்லை (தடை) நோய்க்கு பிறகு உடலின் உறுப்புகள் பெருத்து விடுவதும், சிறுத்து விடுவதும், தேய்ந்து விடுதல், கரைந்து விடுதல் போன்ற உறுப்பின் தோற்றத்தையும், இரத்தம், பித்தம் போன்ற உடலின் எல்லா வகை நீர் பொருட்களையும் மற்றும் தொற்று உடம்பு என்று அழைக்கப்படும் பாக்டீரியா வைரஸ போன்ற நுண் உடம்புகளின் எல்லாவித தோற்றணுக்களையும், நுண் கருவிகளின் மூலம் காண முடியும். மற்ற வகை பூதங்களில் தொற்று ஏற்பட்டுவிட்டால் மருத்துவரின் உதவிகருவிகள் மூலம் கண்டறிய முடியாது. ஆனால் மனித மனத்தாலும் பார்த்தும், கேட்டும், சொல்லியும், ஆராய்ந்தும் தான் கண்டு கொள்ள முடியும். ஆகவே முதல் இரண்டு பூதங்களுக்கு கருவிகளோ எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கருவிகள் வெப்ப,திரவ, கெட்டி பொருட்களால் செய்யப்படுவதால் விண், காற்று ஆகியவற்றின் அளவை காணலாம. தரத்தையும்,மூலத்தையும் அறிய முடியாது. அணுவை அறிய முடியும். பரம அணுவை அதன் எண்ணிக்கையை விஞ்ஞானிகளால் இன்னும் சொல்ல முடியவில்லை. ஞானிகளால்தான் அதன் தன்மையை கூற முடிகிறது.

பிறப்பை பற்றி ஒளவையார் கூறுவதாவது:-

“பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தரம்
மாறி தோன்றலே பிறப்பு” என்கிறார்.

ஆகவே விண்ணை பற்றிதான் எல்லா ஞானிகளாலும் கூற முடிகிறது.

ஆகவே பிறவிகளிலே உயர்ந்தது மனித பிறவி. அது செய்கின்ற செயல் திறனுக்கு ஏற்ப அது பண்பாட்டை பெறுகிறது. மனிதருள் பல வகையான தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும் அவற்றுள் மருத்துவம் செய்யும் தொழிலே சிறப்பானதாக கருதப்படுகிறது. உலகிலே தற்போது மருத்துவ வகை ஆயிரம் இருந்தாலும் அதில் 32 வகையான மருத்துவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிலும் ஐந்து வகை நடைமுறையில் அதிகமாக காணப்படுகின்றன.

1.சித்தா 2.ஆயூர்வேதம் 3.யுனானி 4.அலோபதி 5.ஹோமியோபதி. என்ற ஐந்தாகும்.

இதிலும் அலோபதியும் ஹோமியோபதியும் நேர் எதிரான கருத்துக்களை கொண்டதாகும். இன்று உலகெல்லாம் பரவி இருக்கும் அலோபதி மருத்துவம் தோன்றி 2300 ஆண்டுகள் ஆகின்றது. (அதனை கண்ட) அலோபதி மருத்துவ தந்தை ஹிப்போகிராட்டி பிறந்து 2300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் 200 ஆண்டுகளுக்கு முன்பே அதன் கொடுமையும், கடுமையும் தோன்றி அது மனித மனதை மயக்கி கொண்டு வியாதிகளை தற்சாந்தியே செய்து கொண்டும், அழுத்தி கொண்டும் மறைத்துக் கொண்டும் இருக்கிறது என்பதை அதே துறையில் (அலோபதி) தோன்றி உலக புகழ்பெற்ற ஆஙகில மருத்துவரும் 12 மொழி கற்று வல்லவரான Dr.சாமுவேல் ஹானிமேன் (ஜெர்மனி) அவர்கள் கூறினார். அவர் மனச்சாட்சிக்கு மதிப்பு அளித்து மனிதர்க்கு செய்கின்ற மருத்துவம் குணம் செய்யும் தத்துவம் இது அல்ல என்று கூறி அதுவரை பெற்ற பல வித பட்டஙகளையும் 30 வயதிலேயே துறந்து விட்டு, நோயை எப்படி குணம் செய்வது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அதற்கு தடையாக இருந்த பொருள், புகழ், அதிகாரம், ஐம்புலனிம்பம் என்ற மாயையிலிருந்து மீண்டார். பின்பு நோயை குணம் செய்யவது எப்படி? என்ற ஒரே நோக்கோடு புறப்பட்டார். முன்பே ஆராய்ச்சிகள் பல செய்து M.D.,பட்டம், தலைமை மருத்துவர் பட்டம் ஆஙகில மருந்துகள் பல கண்டுபிடித்து நூல்களும் எழுதியிருந்தார். இதன் துணை கொண்டு அறிந்தார். இனி ஆங்கில மருத்துவத்தின் மூலம் உயிரினங்களுக்கு நிரந்த குணம் அளித்து நன்மை செய்ய முடியாது என்று அது வரை பெற்ற பட்டம், பதவி, செல்வங்களையும் துறந்துவிட்டு உயிரினங்களுக்கு உண்மையான மருத்துவத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்று பல ஆராய்ச்சிகள் செய்து மனிதனாக பிறக்க வைத்த கடவுளுக்கு மனிதனாகவும், உண்மை மருத்துவராகவும் இருக்க வேண்டுமென்று எண்ணி அறிய பெரிய முயற்சிகளையும் செய்து பல நூறு இடையூறுகளுக்கு பிறகு சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு ஹோமியோபதி என்ற மருத்துவம் கண்டார். உயிரினங்கள் படும் வேதனையை தீர்க்கும் கலை என்று இதற்கு பொருள்படும். நோய் என்றால் என்ன, நாள்பட்டதும், தீடீர்வகை நோய் என்றால் என்ன என்பதை பற்றியும் மருந்துகளின் குணத்தை பற்றியும், ஹோமியோபதி தத்துவம் மருத்துவர்களுக்கு மேலும் பலவகையான அதி நுட்பமான செய்திகளையும், அறிவுரைகளையும் ஹானிமேன் அவர்கள் ஆர்கனான் ஆப் மெடிசனில் 6வது பதிப்பு என்ற இந்நூலில் நோயை கண்டு தக்க மருந்து தருவது எப்படி என்று 291 சுலோகங்களில் மிக மிக தெளிவாக, விளக்கமாக, விரிவாக கூறிவிட்டார்.

ஆரத்தி

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

மூச்சு

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

Thursday, 23 May 2013

ஆராதாரங்கள்

ஆராதாரங்களாவது              மூலாதாரம்,சுவாதி~;டானம்,மணிப+ரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை-இவைகளாகும்.
இவைகளுக்கு விபரமாவது
1.மூலாதாரம்-காலெலும்பு இரண்டும் கதிரெலும்புங் கூடிய இடம் குய்யம். குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவே குண்டலி வட்டமாய் அந்த வட்டத்துக்கு நடுவே திரி கோணமாய், அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நாலிதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் கடப்பம் ப+ப்போன்று இருக்கும்.அந்தப் பு~;பத்துக்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும்.அந்த ஓங்காரத்துக்கு நடுவில் விக்னேஸ்வரனும் வல்லபை சக்தியும் எழுந்தருளி இருப்பார்கள்.பச்சை நிறமுள்ளது.

விளக்கம்-முக்கோணம்,நாலிதழு; கமலம்,மாணி;க்க நிறம்,கணபதி ,குண்டலி சக்தி ஓங்காரம் இவை எல்லாம் இவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

2.சுவாதி~;டானம்-இது மூலாதாரத்திற்கு மேல் இரண்டு விரற்கடை மேலே இருப்பதாகும்.இது நாற் சதுரமும்,இதன் நடுவே ஆறிதழ்களை உடைய ஒரு பு~;ப வட்டமும்,அதன் மத்தியிலே லிங்க பீடமும் ,வீணாத் தண்டின் அடியுமாய் இலங்கி நிற்கும்.அதன் நடு மத்தியிலே நகார எழுத்து நிற்கும்.இதன்நடுவில் பிரம்மா சரஸ்வதி வீற்றிருப்பார்கள்.இது பிருதிவு ஆகிய மண்ணின்கூறு ஆகும்.பொன் நிறமாம்.

விளக்கம்-சாற்சதுரம்,ஆறிதழ் கமலம்,பிரம்மா சரஸ்வதி,நகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

3.மணிப+ரகம்-இது சுவாதி~;டானத்திற்கு எட்டு விரல் அளவுக்கு மேலே இருப்பதாகும்.இது கோழி முட்டை போல 1008 நாடி நரம்புகளும் சூழ நாடிக்கெல்லாம் வேறாக உள்ளது.இதையே அறிவுடையோர் உந்திக் கமலம் என்று கூறுவர்.இது தொப்புழுக்கு நேரே அப்பு ஸ்தானத்தில் ஏழாம் பிறைக்கிணங்கி இருக்கும்.இதனடுவே பத்து இதழுடைய ஒரு பு~;பம் வட்டமாய் இருக்கும்.அதன் நடுவே மகார எழுத்து நிற்கும்.இதன் நடுவே மகா வி~;ணுவும் மகா லட்சுமியும் எழுந்தருளி இருப்பார்கள்.பளிங்கு நிறம் உள்ளது.

வுpளக்கம்-மூன்றாம் பிறை,பத்திதழ் கமலம்,மரகத நிறம்,வி~;ணு லட்சுமி,மகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

4.அனாகதம்-இது மணிப+ரகத்திற்குப் 10 விரற்கடைக்கு மேல் உள்ளது.இது இருதயக் கமலமாம்.தேயு ஸ்தானத்தில் முக்கோணமாய் இருக்கம்.அந்த முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டீதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவில் சிகார எழுத்து நிற்கும்.அந்தச் சிகாரத்தின் நடுவில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்.அக்கினி நிறத்தை உடையது.

விளக்கம்-பன்னிரண்டிதழ் கமலம்,முக்கோணம்,ஸ்படீக நிறம்,உருத்திரன் பார்வதி,சிகாரம் இவைஎல்லாம் தோன்றுவது போல் இருக்கும்.

5.விசுத்தி-இது அநாகதத்திற்கு 10 விரற்கடைக்கு மேலே இருப்பதாகும்.இது கண்ட ஸ்தானத்திலேவாயு ஸ்தானத்தில் அமைந்துள்ளது.அறுகோணமாய் இருக்கும்.இதன் நடுவில் 16 இதழுடைய ஒரு ப~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும்.அந்த வகாரத்தின் நடுவே மகேஸ்வரனும் மகேஸ்வரியும் எழுந்தருளி இருப்பார்கள்.கரு நிறத்தை உடையது.

விளக்கம்-பத்னாறிதழ்கமலம்,அறுகோணம்,மேகநிறம்,மகேஸ்வரன்மகேஸ்வரி,வகாரம் இவைகள் தோன்றுவது போல் இருக்கும்.

6.ஆக்ஞை-இது விசுத்திக்கு 12 விரற்கடை மேலே உள்ளது.இதற்கு லலாட ஸ்தானம் என்று பெயர்.இது வீணாத்தண்டின் முடிவுமாய் ஊடுருவிப் பொன் போன்ற வடிவமுற்று நிற்கும்.நெற்றிப் புருவத்தின் வழியாய் ஆகாய ஸ்தானத்தில் மூன்றிதழுடைய ஒரு பு~;பத்தின் நடுவே யகார எழுத்தோடிருக்கும்.அதன் நடுவில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளி இருப்பார்கள்.மேக நிறத்தை உடையது

விளக்கம்-மூன்றிதழ் கமலம்,வட்டம்,படிகநிறம்,சதாசிவம் மனோன்மணி,யகாரம் இவை இவ்விடத்திற் தோன்றுவது போல் இருக்கும்.
ஆராதாரங்களாவது மூலாதாரம்,சுவாதி~;டானம்,மணிப+ரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை-இவைகளாகும்.
இவைகளுக்கு விபரமாவது
1.மூலாதாரம்-காலெலும்பு இரண்டும் கதிரெலும்புங் கூடிய இடம் குய்யம். குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவே குண்டலி வட்டமாய் அந்த வட்டத்துக்கு நடுவே திரி கோணமாய், அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நாலிதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் கடப்பம் ப+ப்போன்று இருக்கும்.அந்தப் பு~;பத்துக்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும்.அந்த ஓங்காரத்துக்கு நடுவில் விக்னேஸ்வரனும் வல்லபை சக்தியும் எழுந்தருளி இருப்பார்கள்.பச்சை நிறமுள்ளது.

விளக்கம்-முக்கோணம்,நாலிதழு; கமலம்,மாணி;க்க நிறம்,கணபதி ,குண்டலி சக்தி ஓங்காரம் இவை எல்லாம் இவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

2.சுவாதி~;டானம்-இது மூலாதாரத்திற்கு மேல் இரண்டு விரற்கடை மேலே இருப்பதாகும்.இது நாற் சதுரமும்,இதன் நடுவே ஆறிதழ்களை உடைய ஒரு பு~;ப வட்டமும்,அதன் மத்தியிலே லிங்க பீடமும் ,வீணாத் தண்டின் அடியுமாய் இலங்கி நிற்கும்.அதன் நடு மத்தியிலே நகார எழுத்து நிற்கும்.இதன்நடுவில் பிரம்மா சரஸ்வதி வீற்றிருப்பார்கள்.இது பிருதிவு ஆகிய மண்ணின்கூறு ஆகும்.பொன் நிறமாம்.

விளக்கம்-சாற்சதுரம்,ஆறிதழ் கமலம்,பிரம்மா சரஸ்வதி,நகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

3.மணிப+ரகம்-இது சுவாதி~;டானத்திற்கு எட்டு விரல் அளவுக்கு மேலே இருப்பதாகும்.இது கோழி முட்டை போல 1008 நாடி நரம்புகளும் சூழ நாடிக்கெல்லாம் வேறாக உள்ளது.இதையே அறிவுடையோர் உந்திக் கமலம் என்று கூறுவர்.இது தொப்புழுக்கு நேரே அப்பு ஸ்தானத்தில் ஏழாம் பிறைக்கிணங்கி இருக்கும்.இதனடுவே பத்து இதழுடைய ஒரு பு~;பம் வட்டமாய் இருக்கும்.அதன் நடுவே மகார எழுத்து நிற்கும்.இதன் நடுவே மகா வி~;ணுவும் மகா லட்சுமியும் எழுந்தருளி இருப்பார்கள்.பளிங்கு நிறம் உள்ளது.

வுpளக்கம்-மூன்றாம் பிறை,பத்திதழ் கமலம்,மரகத நிறம்,வி~;ணு லட்சுமி,மகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.

4.அனாகதம்-இது மணிப+ரகத்திற்குப் 10 விரற்கடைக்கு மேல் உள்ளது.இது இருதயக் கமலமாம்.தேயு ஸ்தானத்தில் முக்கோணமாய் இருக்கம்.அந்த முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டீதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவில் சிகார எழுத்து நிற்கும்.அந்தச் சிகாரத்தின் நடுவில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்.அக்கினி நிறத்தை உடையது.

விளக்கம்-பன்னிரண்டிதழ் கமலம்,முக்கோணம்,ஸ்படீக நிறம்,உருத்திரன் பார்வதி,சிகாரம் இவைஎல்லாம் தோன்றுவது போல் இருக்கும்.

5.விசுத்தி-இது அநாகதத்திற்கு 10 விரற்கடைக்கு மேலே இருப்பதாகும்.இது கண்ட ஸ்தானத்திலேவாயு ஸ்தானத்தில் அமைந்துள்ளது.அறுகோணமாய் இருக்கும்.இதன் நடுவில் 16 இதழுடைய ஒரு ப~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும்.அந்த வகாரத்தின் நடுவே மகேஸ்வரனும் மகேஸ்வரியும் எழுந்தருளி இருப்பார்கள்.கரு நிறத்தை உடையது.

விளக்கம்-பத்னாறிதழ்கமலம்,அறுகோணம்,மேகநிறம்,மகேஸ்வரன்மகேஸ்வரி,வகாரம் இவைகள் தோன்றுவது போல் இருக்கும்.

6.ஆக்ஞை-இது விசுத்திக்கு 12 விரற்கடை மேலே உள்ளது.இதற்கு லலாட ஸ்தானம் என்று பெயர்.இது வீணாத்தண்டின் முடிவுமாய் ஊடுருவிப் பொன் போன்ற வடிவமுற்று நிற்கும்.நெற்றிப் புருவத்தின் வழியாய் ஆகாய ஸ்தானத்தில் மூன்றிதழுடைய ஒரு பு~;பத்தின் நடுவே யகார எழுத்தோடிருக்கும்.அதன் நடுவில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளி இருப்பார்கள்.மேக நிறத்தை உடையது

விளக்கம்-மூன்றிதழ் கமலம்,வட்டம்,படிகநிறம்,சதாசிவம் மனோன்மணி,யகாரம் இவை இவ்விடத்திற் தோன்றுவது போல் இருக்கும்.

நன்றி

http://www.facebook.com/gnanayohi.yohi

Sunday, 5 May 2013

உளுந்து

நோயின் பாதிப்பு நீங்க

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!


இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆனால் இத
்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.

சரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!


பட்டை

                         இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.

கிராம்பு

                         இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.

சீரகம்
                         பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.

கருப்பு ஏலக்காய்

                          கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றி லிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படு வோருக்கு நல்ல நிவாணம் தரும்

குங்குமப்பூ


                          
பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது

ஜாதிக்காய்

                          
இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

மிளகு

                          
அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பெருங்காயம்

                          
பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை களான  மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனை களுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

மூலிகைகளை பயன்படுத்தி


நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்



செவ்வாழை..!

சோற்றுக் கற்றாழை

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

அத்திப்பழம்

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

                         அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

                         கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

                         சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
புகைப்படம்: சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம் 

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

Tuesday, 5 March 2013

முத்திரைகள்

                         அண்டம்,பிரபஞ்சம் ,யுனிவர்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி யோசனை செய்து பாருங்கள் , இது எப்படி நடக்கிறது. விஞ்ஞானம் ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும் அனைவருக்கும் புரிந்துவிடாது.
ஒரு வெற்றிடமான அந்தரங்கத்தில் சூரியன் ,கோள்கள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இவை எப்படி ஒரு ஒழுங்கு முறையோடு அதனதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
இது எப்படி சாத்தியம்? நாம் என்றைக்கும் சிந்தித்துணர முடியா விஷயம். ஆனால் இறை ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சொன்னது ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் தன்பணியை தொடர்ந்து செய்வதன் காரணம் ,நீர்,நிலம், காற்று, ஆகாயம்,நெருப்பு, இந்த ஐந்து விஷயங்கள்தான்.இந்த ஐந்தையும் பஞ்சபூதம் என்கிறோம். இதில் எதாவது ஒன்றில் அதன் செயல்பாட்டில் குறைவு பட்டோ,மிகுந்தோ போனால் பிரபஞ்சம் ,அண்டம் ,யுனிவர்ஸ் என்கிற இந்த விஷயம் இல்லாமல் போயிருக்கும்
                            சரி அதைவிடுங்க...நாம மனிதனாக உருவம் கொண்டு .....பேசுகிறோம்,..கை, கால்களை அசைக்கிறோம் ...இன்னும் என்னவெல்லாமோ ஜகஜால வித்தையெல்லாம் செய்யறோம் . இதற்க்குக் காரணம் ஒரு ஆற்றல் நமக்குள்ளே இருக்கிறது அதை உயிராற்றல் என்று சொல்லிவிடலாம். இந்த உயிரை யாராவது பார்த்ததுண்டா ? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் விடை தெரியா புதிர் தான் உயிர்.
'''''பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தரம் மாறில்
தோன்றும் பிறப்பு''''''
                            அவ்வையார் பாட்டைப் பொருளுணர்ந்து பார்க்கும்போது இந்த உயிர் என்கிற மேட்டர் இந்த உடல் என்கிற விஷயமாக மாறுவதற்கு முன்பு கண்களுக்கு புலப்படாத நுண் மூலகங்கலாகத் தான் இருந்தது என்கிறார். அப்படியென்றால் இந்த உயிர் என்பது பஞ்சபூதங்களின் கலவை(our body and soul is a mixture of five elements) என்று உணர முடியும்.
                            நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது இந்த பிரபஞ்சம் , இந்த உடல் இவைகளின் மூலம் ,அடிப்படை எல்லாமே இந்த நீர்,நிலம், காற்று, ஆகாயம்,நெருப்பு என்கிற பஞ்ச பூதங்கள்மட்டுமே.அதனால் தான்
''''''அண்டத்தில் உள்ளதே ,பிண்டத்தில் உள்ளது
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது
அண்டமும் ,பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும்போது''''''''''''

நோய் தீர்க்கும் முத்திரைகள்
                            முத்திரைகள் நமது முன்னோர்களின் இறை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம். நல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய,நம் உடலின் நோய்களை தீர்க்கக்கூடிய வல்லமைகொண்ட அற்புதங்களை நிகழ்த்தும்  ஒரு  முறை. அன்றாடம் நம் வாழ்வில் தேவைப்படும் சமயத்தில், தேவைப்பட்ட முத்திரைகளைச் செய்யும்போது நம் உடல் சம்பந்தமான சிக்கல்களை மிக எளிதாக சரி செய்து கொள்ள முடியும்.




பஞ்ச பூதங்கள் இந்த அண்டத்திலும் உள்ளது. நம் உடலினுள்ளும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் முந்தைய பதிவில் கண்டோம்.
பஞ்சபூதங்கள் சமநிலையிலிருந்தால் பிரபஞ்சம் தொடர்ந்து தன பணியை செவ்வனே செய்து கொண்டிருக்குக்கும். அப்படி செய்து கொண்டிருப்பதாலேயே  இன்றளவும்  சீராக இயங்கிக்கொண்டிருகிறது.நம் உடலும் பஞ்சபூத சமன்பாட்டின்படியே சீராக இயங்கிகொண்டிருக்கிறது.நோய்களற்ற நிலையில் உள்ளது.


கட்டைவிரல்



நடுவிரல்



ஆள்காட்டிவிரல்





 'மிகினும் குறையினும் நோய் செய்யும்'அய்யன் வள்ளுவர் வாக்குப்படி, இந்த பஞ்ச பூதங்களில் செயல்பாடு மிகுந்து போனாலோ ,அல்லது குறைவு பட்டு போனாலோ அதாவது இயல்பான நிலையிலிருந்து சற்று பிசகிவிட்டாலோ நம் உடல் நோய் வசமாகிவிடும், துன்பம் நம்மை ஆட்கொண்டுவிடும்.


சுண்டுவிரல்

நம்முடைய ஐந்து விரல்களும் ஒவ்வொரு பஞ்சபூத மூலகத்தை குறிக்கும்.கட்டைவிரல் நெருப்பையும் ,ஆள்காட்டி விரல் காற்றையும்,நடுவிரல் ஆகாயத்தையும்,மோதிரவிரல் நிலத்தையும்,சுண்டுவிரல் நீரையும் குறிக்கும்.பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.
முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும்?


முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை இப்போது காணலாம்.நமது ஒவ்வொரு விரலும் ஒரு மூலகத்தை சார்ந்திருக்கிறது, தேவைக்கேற்ப விரல்களை தொடுவதன் மூலம் நம் உடலின் பஞ்ச பூத சமன்பாட்டை நேர்படுத்தி நோயிலிருந்து முழுமையாக் விடுபடலாம்.
                                  கழிவுகளின் தேக்கம் நோய்.அப்படியானால் கழிவுகளின் நீக்கமே மருந்து. எனவே கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.அதனால் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர் முதலில் இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு அம்மாவாசை நாளில் ஆரம்பிக்க வேண்டும். வளர்பிறை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிட்டும்.
                                                          இதற்குப் பெயர் கழிவுநீக்க முத்திரை
 கட்டைவிரலின்நுனிப்பகுதியால்மோதிரவிரலின் கீழஅதாவதுமூன்றாவதுரேகைஉள்ளஇடத்தைதொடவும்.மெல்லியஅழுத்தம்போதுமானது.சம்மணம் ,பத்மாசனம்,சித்தாசனம்இந்தநிலையில்சுவாசத்தைசாதாரணமாகநிலையில்வைத்துஅதைகவனித்துவரவேண்டும்.ஒரு௨௦நிமிடங்கள்செய்யும்போதுஉடலின்கழிவுகள்வெளியேறஆரம்பிக்கும்.அப்போதுசிறுநீர்அதிகம்போவது,அதில்வாடைவீசுவது,மலம்அதிகவாடையுடன்அடிக்கடிபோவது,கறுத்துமலம்வெளியேறுவது.வியர்வைஅதிகம்வெளியேறுவது ,அதில்வாடைவீசுவது,பேதிஉண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது. 




 காற்று மூலகம் METTAL ELEMENT

மெட்டல் என்கிற  காற்று மூலகம்
                                                            காற்று  இல்லாமல் நம்மால் கண்டிப்பாக உயிர் வாழ முடியாது.இன்று அநேகப் பேர்  ஏன் அனைவருமே மூச்சு என்கிற விஷயத்தை நினைப்பதேயில்லை. பொத்தாம் பொதுவாக மூச்சு முக்கியம் என்று சொன்னாலும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிய முனைவதில்லை. ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.இறை ஞானிகள் அதைக் கற்றுத்தேர்ந்தவர்கள். மூச்சுக்காற்றை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். நாம் அந்த அளவு தெரிய வேண்டியதில்லை,கொஞ்சம் முறையான சுவாசம் செய்யத் தெரிந்தாலே ஆரோக்கியம் நமக்குச் சொந்தம்.நீண்ட மூச்சு உள்வாங்கி, நீண்ட மூச்சாக வெளிவிடவேண்டும். பொதுவாகவே நம் அவசரகதி வாழ்க்கையில் வேகமான சுவாசமே அன்றாடம் நடக்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்றானது நம் நுரையீரலை முழுமையாக அதன் அடிப்பகுதி நுண்ணறைகள் வரை செல்கிறதா என்றால் , கண்டிப்பாக இல்லை. இந்த மண்ணெண்ணெய்  பம்ப் ஸ்டவ்வில் எப்படி காற்றடிப்போமோ அந்த மாதிரி பொசுக்,பொசுக் என்று தான் மூச்சு விடுகிறோம் . நாம் இழுக்கும் காற்று நுரையீரல் வாயில் (entrance) வரை சென்று ,வெளியேறிவிடுகிறது. காரணம் படபடப்பு ,பதட்டம், ஓட்டம் .பணம் பண்ணவேண்டும் ,பணம் பண்ணவேண்டும் என்ற ஓட்டம்.நம்முடைய உடலின் கடைக்கோடி ஒவ்வொரு அணுவுக்கும் உண்டான ஆக்சிஜன் கிடைத்ததா என்று உணர மறந்துவிட்டோம்.முடிவில் நோய் ,வாழும் வயதில் மரணம் .இதற்க்கு யார் காரணம் . நாம், நம் மனம்.
"நான் உன்னைப் படைத்ததே என்னை வணங்குவதற்கன்றி வேறெதற்காகவும் இல்லை"
                              இறைவன் சதாசர்வ காலமும் தன்னை  நினைப்பதற்கும் வணங்குவதற்கும் தான் மனிதனாகிய உன்னைப் படைத்தேன்.அதாவது இறையைத்தேடு என்கிறான் .நமக்கு இந்த வல்லினம் ,மெல்லினம்,இடையினத் தகராறு எப்போதும் இருப்பதால் நாம் இறைவனைத் தேடாமல் இரையைத் தேடி ஓடுகின்றோம். இந்த அவசரமான ஓட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை முறையில் முறையான சுவாசம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. உணர்ந்தவர்கள் முறையாகச் செய்து ஆரோக்கிய வாழ்க்கையைப் பெறுகின்றனர். நம் உடலில் உயிர் என்பது பஞ்சபூதக் கலவை என்று முன்னர் கண்டோம். இந்த பஞ்சபூதங்கள் எங்கே இருக்கிறதோ அங்கே உயிர் நலமாக இருக்கும். பஞ்ச பூதம் ஒன்றில் குறைவு ஏற்ப்பட்டாலும் நம் உயிருக்கு நலம் கெடும் என்பது உறுதி.
                                                         அப்போ , இந்த காற்று என்கிற மூலகத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதை கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும். மீண்டும் முத்திரையோடு சந்திக்கிறேன்......



METTAL(காற்று)மூலகம் அதிகமாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரை

                             காற்று மூலகம் நம்முடைய உடலில் அதிகமாக இருக்கும்போது என்னென்ன தொந்தரவு ஏற்படும், குறைந்தால் என்ன மாதிரி இருக்கும் என்பதை 
 நாம் உணர வேண்டும். அக்குப்பங்க்சர் நோக்கில் பார்க்கும்போது  
மெட்டல் மூலகம் குறைந்தால்
 தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ,
சுவாசிப்பதில் சிக்கல்,
ஆஸ்த்மா ,
சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும்.
       அதே நேரம்
 மெட்டல் மூலகம் அதிகமாகிப் போனால்
செரிமானக் குறைபாடு ,
மூட்டு வலி,
முதுகு, கழுத்துப் பகுதிகளில் உண்டாகும் வலி,
அடிக்கடி ஏப்பம் ,
வயிற்றுபகுதி உப்புதல் ,
இந்த மாதிரி நோய்கள் உண்டாகும்.


காற்று என்கிற மெட்டல் அதிகமிருந்தால் இந்த முத்திரை செய்ய வேண்டும்

நம்முடைய ஆள்காட்டி விரலை மடித்து , நம்முடைய கட்டை விரலைக் கொண்டு ஆள்காட்டி விரலின் இரண்டாவது ரேகையின் பின்புறம் லேசாக வைத்து  தொட வேண்டும்.அதிக அழுத்தம் தேவையில்லை.சுவாசத்தை ஆழமாக அதே நேரத்தில் சீராக வைத்து , நம் கவனத்தை இந்த முத்திரை.யின் மேல் வைக்க வேண்டும்.இந்த முத்திரையைச் செய்யும்போது நம்முடைய காற்று மூலகத்தைக் குறைக்க முடியும.
இந்த முத்திரை உடனடியாக வயிற்றில் நிறைந்துள்ள அதிகப்படியான  வாயுவை வெளியேற்றிவிடும்.

மூட்டு வலி ,எலும்பு ஜாயிண்ட்ஸ் வலி இவற்றை நீக்கும் .
வாத வழிகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த முத்திரையால் பலன் பெறலாம் .
சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட பெரியதாக்கி மனதளவில் துயரப்படுபவர்களுக்கும்,எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்களுக்கும்,மன உறுதியைக் கொடுக்கும்.தலைசுற்றல் , தூக்கமின்மையைச் சரி செய்யும் .
வாத தோஷத்தினால் ஏற்ப்படக்கூடிய முதுகு வலி, மற்றும் சைனோவியல் திரவம் சுரப்புக் குறைவினால் எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி, மற்றும் படக்,படக் என்ற சத்தம் இவைகளுக்கு நல்ல பலன் தரும்.
விக்கலைக்குறைக்கும்
ஓரளவு காது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு தருவதோடு,தேவையில்லாமல் கண் இமைகள் துடிப்பதை சீராக்கும்.
தோலின் மென்மைக்கும்,மேன்மைக்கும் இந்த முத்திரை உகந்தது.



காற்று என்கிற மூலகம் குறைவாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரை 
 
இந்த முத்திரையை நமது ஆள்காட்டி விரலை மடித்து அதன் முதல் ரேகை அதாவது ஆள்காட்டி விரல் நகத்தின் மீது  கட்டை விரலை வைத்து மெதுவாகத் தொடவேண்டும்.
இந்தமாதிரி செய்யும்போது மெட்டல் என்கிற காற்று குறையும்போது ஏற்படும் பிரச்சினைகளான உடல் அசதி ,மந்தத்தன்மை ,மூச்சு விடுவதிலுள்ள சிரமம் ,எக்சிமா ,நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு  இவைகள் மறையும்
 பிரித்திவி முத்திரை

பிரித்திவி முத்திரை எப்படி செய்வது என்று பார்ப்போம் .



பிரிதிவி முத்திரை


பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவேண்டும் . இப்படிச் செய்வதால்  – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
இது உங்கள் மேனி எழிலுக்கும்,தோல் நிறத்துக்கும் உதவுகிறது. 
இந்த முத்திரையை மதியம் உணவுக்கு முன்பு ஒரு இருபது நிமிடங்கள்  செய்துவிட்டு சாப்பிடவும். பிறகு அந்த நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்பைப் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.காலையில் செய்யும்போது உங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைத்துவிடும்.நீண்ட நாள் நோயால் பாதிப்படைந்த நபர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.
மொத்தத்தில் அக்குப்பங்க்சர் பார்வையில் இது மண் மூலகத்தைச் சமன் படுத்தும் வேலையைச் செய்யும்.




அபான முத்திரை



அபான முத்திரையை  மேலே உள்ள படத்தில் இருப்பதைப் போல செய்ய வேண்டும்.
அதாவது மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு  லேசாகத் தொடவேண்டும். இதனால் என்ன பயன் நமக்குக் கிடைக்கிறதென்றால்,
சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுக்கள் நன்கு வேலை செய்வதோடு, சுகப்பிரசவம் தரும், கர்ப்பப்பை , மாதவிடாய் கோளாறுகளை நீக்கவல்லது. பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
நேர அளவு: 
                            எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும்.
பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.
� இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.
� கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்

குறிப்பு: இதை கர்ப்பிணிகள், முதல் 8 மாதம் வரை செய்யக்கூடாது.




மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நாடு விரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும்.படத்தை நன்றாகப் பார்க்கவும்.சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.
பயன்கள்:     இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும்.
                         தலைவலி,ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன்  இவைகள் தீரும்.



வாயுவைச் சமன்படுத்தும் முத்திரை  
சரி எனக்கு மெட்டல் என்கிற காற்று மூலகம் அதிகமா,குறைவா என அறிய முடிவில்லை என்கிறீர்களா . நீங்கள் வாயுவைச் சமன்படுத்தும்
முத்திரையைச்
செய்துகொள்ளுங்கள்.இந்த முத்திரைகளை சுகாசனம் ,சித்தாசனம் ,பத்மாசனம், இவைகளுள் ஏதாவதொரு இருப்பில் அமர்ந்து செய்ய வேண்டும். வஜ்ராசனம் சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து பத்து நிமிடம் செய்ய வேண்டும்.ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் செய்து பிறகு பத்து நிமிடம் செய்யலாம். பத்து நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்




சுரபி முத்திரை
சுரபி முத்திரையை சற்று கவனமாகச் செய்ய வேண்டும்.பேரு விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடாமல் இருக்க வேண்டும்.
விரல் நுனிகள் கீழ்க்கண்டவாறு தொடவேண்டும்:
வலது ஆள்காட்டி விரல் நுனி   +     இடது நடுவிரல் நுனி
வலது நடு விரல் நுனி   +   இடது ஆள்காட்டி விரல் நுனி
வலது மோதிர விரல்   +  இடது சுண்டுவிரல் நுனி
வலது சுண்டுவிரல்  +  இடது மோதிர விரல் நுனி
இதக் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்யும் போது சற்று கடினமாக இருக்கும். இது மரம் (ஆகாயம்) ,  நெருப்பு,எர்த் (மண்), மெட்டல்(காற்று), நீர்  இந்த ஐந்து மூலகங்களையும் சமபடுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு.யோகக்கலை பயில்கின்ற நபருக்கு இது மிகவும் ஏற்றது .  மனதை  அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்க்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.
மேலும் உடல் வலுவாகும், சிறுநீரக நோய்கள் விலக இந்த முத்திரையை ஒரு இருபது நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.